sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ராக்கெட் தயாரிப்பு பயிற்சி மையம் தையூரில் திறந்துவைப்பு

/

ராக்கெட் தயாரிப்பு பயிற்சி மையம் தையூரில் திறந்துவைப்பு

ராக்கெட் தயாரிப்பு பயிற்சி மையம் தையூரில் திறந்துவைப்பு

ராக்கெட் தயாரிப்பு பயிற்சி மையம் தையூரில் திறந்துவைப்பு


ADDED : ஜூலை 18, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய கோமான் நகர் பகுதியில், ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு சார்பில், ராக்கெட் தயாரிப்பு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில், ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஆனந்த் மேகலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் இயக்குனர் ராஜன், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, தையூர் ஊராட்சி தலைவர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

விண்வெளி யுகம் வேகமெடுத்துள்ளது. நிலவில் தண்ணீர் கண்டுபிடித்தோம், செவ்வாய்க்கு சென்றோம். அந்த வகையில், பூமியை தாண்டி இன்னொரு கிரகத்திற்கு சென்று, அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகளுக்கு, விண்கல ஏவுதல்கள், புதுப்புது கண்டுபிடிப்புகள் தேவை. இதில், அரசின் விண்வெளித் துறையை தாண்டி, தனியார் துறையும் பங்களிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில், கடந்த ஆண்டு மாமல்லபுரம் அருகே ராக்கெட் ஏவப்பட்டது.

தொடர்ந்து, வரும் ஆக., 24ம் தேதி, அடுத்த ராக்கெட் அனுப்பப்பட உள்ளது.

கல்வி நிறுவனங்கள் ஒரு பொறியாளரை உருவாக்கும்போது, பாடப்புத்தகத்தை தாண்டி, இதுபோன்ற மையத்தில் செய்முறை பயிற்சி எடுப்பது சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us