sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் சிக்கினார்

/

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் சிக்கினார்

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் சிக்கினார்

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் சிக்கினார்


ADDED : ஜூலை 17, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சொத்துக்காக, தந்தையை வாகனம் ஏற்றி கொலை செய்து தலைமறைவான, மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; இவருக்கு மூன்று மகள்கள், வெங்கடேசன், 28, என்ற ஒரு மகன் உள்ளனர்.

தந்தை ராஜேந்திரனுக்கு சொந்தமான வீடு, அதையொட்டியுள்ள நிலத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு வெங்கடேசன் கேட்டுள்ளார்.

இதற்கு, மகள்களுக்கும் சேர்ந்து நான்கு பாகமாக பிரித்துக் கொடுப்பதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

கடந்த 10ம் தேதி இரவு, சாலையோரம் நின்றிருந்த தந்தை ராஜேந்திரன் மீது, மினி வேனை ஓட்டி சென்று வெங்கடேசன் மோதினார்.

இதில், ராஜேந்திரன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே, வெங்கடேசன் தலைமறைவானார்.

பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பாரிவாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த வெங்கடேசனை, போலீசார் நேற்று பிடித்தனர். அப்போது, தவறி விழுந்த வெங்கடேசனுக்கு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின், வெங்கடேசன் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us