/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகளின் விபர பதிவு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்
/
விவசாயிகளின் விபர பதிவு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்
விவசாயிகளின் விபர பதிவு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்
விவசாயிகளின் விபர பதிவு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்
ADDED : மார் 04, 2025 07:17 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் பதிவு சரி பார்த்தல் சிறப்பு முகாம், 31ம் தேதி வரை நடக்கிறது.
கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கை:
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கைபோன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சர்மபிக்க வேண்டி உள்ளது.
இதில், ஏற்பாடும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன் பெற ஏதுவாக, அனைத்து விவசாயிகளையும் மின்னணு முறையில் சேகரிக்க வேளாண் அடுக்கு திட்டம் செயல்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்களை இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களில் நடந்து வருகிறது.
நடப்பு 2025 -26 ம் நிதி ஆண்டு முதல் , பிரதம மந்திரி கவுரவ நிதித்திட்டம், பயிர் காப்பீடுத்திட்டம் போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, அனைத்து விவசாயிகளும் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள். பொதுசேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விவரங்களை அளித்து வரும் 31ம் தேதிக்குள், பதிவு செய்யலாம்.
மேலும் தகவலுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.