sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு

/

மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு

மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு

மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு


ADDED : மார் 02, 2025 11:24 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில், தெருநாய்கள் உலவி, சுற்றுலா பயணியரை அச்சுறுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

மாமல்லபுரத்தில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பிரதான சாலைகள், வசிப்பிட பகுதிகள் ஆகிய இடங்களில், பகலிலும், இரவிலும் நாய்கள் கூட்டமாக உலவுகின்றன.

இவை பாதசாரிகள், இருசக்கர வாகன பயணியரை விரட்டுகின்றன. ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு மோதிக் கொள்கின்றன. தற்போது, கடற்கரை கோவில் வெளிப்புற புல்வெளி பகுதி, அர்ஜுனன் தபசு. வெண்ணெய் உருண்டை பாறை, வராக குடவரை மண்டபம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட சிற்ப பகுதிகளில், நாய்கள் கும்பலாக குவிந்து, சுற்றுலா பயணியரை அச்சுறுத்தி விரட்டுவதால், பயணியர் பீதியில் சென்று வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தெருக்கள், சிற்ப பகுதிகளில் உலவும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us