/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென்மேல்பாக்கம் சாலையில் எரியாத விளக்குகளால் அவதி
/
தென்மேல்பாக்கம் சாலையில் எரியாத விளக்குகளால் அவதி
ADDED : மே 31, 2024 02:25 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை, திருப்போரூர் --செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை பயன் படுத்தி, தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம்உள்ளிட்ட பல்வேறுபகுதிகளுக்கு சென்றுவருகின்றனர்.
இந்த சாலையில், தென்மேல்பாக்கம் -- சிங்கபெருமாள் கோவில் வரை, 2 கி.மீ., தொலைவுக்கு, தென்மேல்பாக்கம் ஊராட்சி சார்பில், மின்கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுஉள்ளன.
இதில், மொத்தம் 25 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், அவற்றில் 15 மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவதில்லை.
இதனால், இந்த சாலை இருள் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, இந்த சாலையில் எரியாமல் பழுதடைந்து உள்ள மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகனஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.