/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செஸ் போட்டியில் தமிழக வீரர் முன்னிலை
/
செஸ் போட்டியில் தமிழக வீரர் முன்னிலை
ADDED : ஆக 11, 2024 05:49 AM

சென்னை : தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியை, கீழ்ப்பாக்கத்தில் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது.
மூன்றாம் கட்டமாக நடந்து வரும் இப்போட்டியில், ஐந்து இந்திய வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் மோதி வருகின்றனர்.
நேற்று மதியம் நடந்த முடிந்த, ஏழாவது சுற்றுகள் முடிவில், இந்தியாவின் தமிழக வீரர் ஹர்ஷித் 5.5 புள்ளிகள் பெற்று, முன்னிலையை தக்க வைத்தார்.
அவருடன் அதேபுள்ளியில், மங்கோலியாவின் வீராங்கனை உரிந்துயா ஊர்ட்சைக் முன்னிலையில் உள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, தமிழக வீரர் ஆகாஷ், ரஷ்யாவின் அலேக்சாண்டர், ஸ்லோவாக்கியாவின் மானிக் மிகுலாஸ் ஆகியோர், தலா 4 புள்ளிகளுடன் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

