sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சிறுவன் கைது

/

பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சிறுவன் கைது

பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சிறுவன் கைது

பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சிறுவன் கைது


ADDED : மே 10, 2024 10:26 PM

Google News

ADDED : மே 10, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே உள்ள நெசப்பாக்கம் கிராமம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன், 52. இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்கையில் கட்டிவிட்டு, வீட்டின் வெளியே உறங்கி உள்ளார். நேற்று காலை 7:30 மணிக்கு, லோகநாதன் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் ஏற்பட்டு, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சம்பவம் குறித்து, லோகநாதனின் உறவினர்கள் செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குபதிந்து விசாரணை செய்தனர்.

சந்தேகத்தின்படி, லோகநாதனின் தம்பி பூபாலன் என்பவரின் 16 வயது மகனிடம் விசாரணை செய்தனர். அப்போது, சிறுவன் தான் கொலை செய்தது தெரிந்தது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

நேற்று முன்தினம் இரவு, மது போதையில் ஆடு திருட சென்ற சிறுவன், லோகநாதன் ஆடுகளை அடைத்து வைத்திருந்த கொட்டகைக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது, ஆடுகள் கத்தியதால், சத்தம் கேட்டு எழுந்த லோகநாதன், ஆடு திருட வந்த தன் தம்பி மகனை கண்டு, அவனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 16 வயது சிறுவன், தன் பெரியப்பா லோகநாதனை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பி சென்றுள்ளான்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து, செய்யூர் போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us