sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வெயிலால் மயங்கி விழுந்த பயணி பலி

/

வெயிலால் மயங்கி விழுந்த பயணி பலி

வெயிலால் மயங்கி விழுந்த பயணி பலி

வெயிலால் மயங்கி விழுந்த பயணி பலி


ADDED : மே 07, 2024 08:54 PM

Google News

ADDED : மே 07, 2024 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன், 42. இவர், தாம்பரம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள இவரது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று முன்தினம் மதியம் தாம்பரத்தில் இருந்து பேருந்து வண்டலுார் வந்து, அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது, கடும் வெயில் தாளாமல், திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அப்பகுதிவாசிகள், ஓட்டேரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாலையில் மயங்கி கிடந்த முருகனை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, முருகனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us