/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை தெப்போற்சவம் வரும் 13, 14ல் தீர்த்தவாரி
/
மாமல்லை தெப்போற்சவம் வரும் 13, 14ல் தீர்த்தவாரி
ADDED : மார் 01, 2025 11:45 PM
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், வரும் 13ம் தேதி, ஸ்தலசயன பெருமாள் தெப்போற்சவம், மறுநாள் மாசிமக தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடைபெறுகின்றன.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர்.
வைணவ சமய 108 திவ்ய தேசங்களில் 63வதாகவும், நிலம் சார்ந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது.
ஸ்தலசயன பெருமாள், ஆண்டுதோறும் மாசிமக உற்சவமாக, மாசி மாத பவுர்ணமி நாள் இரவில் தெப்போற்சவம், மறுநாள் காலை, வங்க கடலில் சுவாமி தீர்த்தவாரி என காண்கிறார்.
தற்போது, வரும் 13ம் தேதி இரவு, கோவில் தீர்த்தமான புண்டரீக புஷ்கரணி குளத்தில் தெப்போற்சவமும், மறுநாள் காலை, சுவாமி கடலில் நீராடும் தீர்த்தவாரியும் நடத்துவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.