sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகம் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் உட்கார வசதி இல்லை

/

மதுராந்தகம் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் உட்கார வசதி இல்லை

மதுராந்தகம் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் உட்கார வசதி இல்லை

மதுராந்தகம் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் உட்கார வசதி இல்லை


ADDED : ஆக 28, 2024 01:22 AM

Google News

ADDED : ஆக 28, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் :மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உடையது. இங்கு, நகராட்சி கட்டடம் பழமையானதால், மதுராந்தகம் - சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம், புதிதாக நகராட்சி கட்டடம் கட்டப்பட்டடு செயல்பட்டு வருகிறது.

தற்போது, பழைய நகராட்சி கட்டட வளாகத்தில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ், ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

இதில், ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்தல், புதுப்பித்தல், மொபைல் போன் எண் மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல், முகவரி திருத்தம் செய்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன.

இதனால், மதுராந்தகம் நகராட்சி மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும், 50-க்கும் மேற்பட்டோர் இம்மையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் என, பலதரப்பட்ட மக்களும் ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்கு, மூன்று பேர் அமரும், ஒரே ஒரு இருக்கை மட்டுமே உள்ளது. இதனால், ஆதார் மையத்தின் எதிரே, தரைப்பகுதியில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

நகராட்சி குப்பை வண்டிகள், நகராட்சி பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள், ஆதார் மையம் உள்ள பகுதியில் தான் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் போதிய அளவு இட வசதி இல்லை.

மேலும், துாய்மை செய்யப்படாத குப்பை வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஆதார் மைய வளாகத்தை துாய்மைப்படுத்தி, இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us