/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிலத்தை சேதப்படுத்திய வழக்கு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்
/
நிலத்தை சேதப்படுத்திய வழக்கு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்
நிலத்தை சேதப்படுத்திய வழக்கு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்
நிலத்தை சேதப்படுத்திய வழக்கு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்
ADDED : ஆக 29, 2024 09:38 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில், ஆதிதிராவிடர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நினைவஞ்சலி கூட்டம் நடக்கும்.
கடந்த 2021ம் ஆண்டு, நினைவஞ்சலி கூட்டத்திற்கு, வி.சி., தவைர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிககள், தனியார் நிலம் வழியாக சென்றனர்.
அப்போது, தனியார் நிலத்தை, திருமாவளவன் உள்ளிட்டோர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, காரணை பகுதியைச் சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி என்பவர், மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமாவளவன் உள்ளிட்ட 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, அவர் உள்ளிட்ட 14 பேர் மீதான வழக்கை பதிவு செய்து, வரும் அக்,, 1ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

