/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் விபத்தில் திருநங்கை பலி
/
சிங்கபெருமாள் கோவிலில் விபத்தில் திருநங்கை பலி
ADDED : ஆக 17, 2024 07:40 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா, 35. திருநங்கையான இவர், நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி, ஜி.எஸ்.டி., சாலையில், 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சிங்கபெருமாள் கோவில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், சகுந்தலா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
அதில், சாலையில் விழுந்த சகுந்தலா, தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.