sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற இருவர் கைது

/

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற இருவர் கைது

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற இருவர் கைது

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 26, 2024 11:02 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு பகுதியில், பாலுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

அதனால், இருவரையும் போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள், 1.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை செய்தனர்.

அதில், இருவரும் தெள்ளிமேடு பகுதியை சேர்ந்த மாதவன், 23, சென்னை, எண்ணுார் பகுதியை சேர்ந்த பிரான் வினோத், 28, என்பதும் தெரிந்தது.

அவர்கள் இருவரும், தெள்ளிமேடு, கொளத்துார், வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சீமைகருவேலமர புதர்களில் பதுங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us