sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்

/

கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்

கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்

கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்


ADDED : டிச 14, 2024 07:25 PM

Google News

ADDED : டிச 14, 2024 07:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியிலுள்ள நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சார் - பதிவாளராக, வைத்தியலிங்கம் என்பவர் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருநாள் மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் என்பதால், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இடம், வீடு, வாங்கியோர், பத்திர பதிவு செய்ய சார் - பதிவாளர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரின்படி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், ஆய்வாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, நள்ளிரவு வரை ஆய்வு செய்தனர்.

அப்போது, கணக்கில் வராத 5.62 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்திற்கு தொடர்பில்லாத முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன், சார் - பதிவாளர் வைத்தியலிங்கம் பணி தொடர்பாக நீதிமன்றம் சென்ற நிலையில், துணை சார் - பதிவாளர் பணியில் இருந்த போது, பொதுமக்கள் புகார் அளித்ததாக சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், கணக்கில் வராத 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்து சென்றனர்.

தற்போது இதேபோல், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வு செய்து, 5.62 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.






      Dinamalar
      Follow us