/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குரங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்
/
குரங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்
குரங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்
குரங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2025 11:27 PM

சித்தாமூர்,சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 37 கிலோமீட்டர் நீள மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர்.
தினசரி சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து என ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
பூங்குணம் காட்டுப்பகுதியில் அனைத்து நேரங்களிலும் நெடுஞ்சாலை ஓரத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குரங்கள் உலா வருவது தெரியாமல் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆகையால் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.