sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அறங்காவலர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு

/

அறங்காவலர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு

அறங்காவலர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு

அறங்காவலர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு


ADDED : செப் 15, 2024 11:11 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம், : ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. கோவிலில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட சுவாமியர் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

நான்கு வேதங்களே, சிவபெருமான் திருவடியில் வீற்றிருக்க ஆசிபெற்று, மலைக்குன்றுகளாக வீற்றுள்ளன. ஒரு குன்றின் உச்சியில் கோவில் அமைந்துள்ள நிலையில், பவுர்ணமி கிரிவல தலமாக விளங்குகிறது.

அறநிலையத்துறை கோவில்களில், பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க முடிவெடுத்து, கடந்த ஜூனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இக்கோவில் அறங்காவலராக விரும்பி, 12 பேர் விண்ணப்பித்தனர். அத்துறை ஆய்வாளர் தரப்பில், விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள், நேற்று முன்தினம் சரிபார்க்கப்பட்டன.

அதில், 10 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், விண்ணப்பதாரர் ஆதார், வாக்காளர் அடையாள எண், சொத்து, மருத்துவம், போலீஸ் உள்ளிட்ட சான்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.






      Dinamalar
      Follow us