/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் 29க்கு ஒத்திவைப்பு
/
வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் 29க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 21, 2024 07:23 AM
சென்னை, : சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து, 6வது சென்னை சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகின்றன.
மாவட்ட அளவிலான இப்போட்டியில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட அனைத்து பள்ளியின் இருபாலர் அணிகளும் பங்கேற்கலாம்; வயது வரம்பு கிடையாது.
போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டிகள், இம்மாதம் 29ம் துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
விபரங்களுக்கு சென்னை மாவட்ட வாலிபால் சங்க அலுவலகம் அல்லது 94448 42628, 98418 16778 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் நேற்று தெரிவித்தது.