sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வண்டலூரில் சாலை படுமோசம் சீரமைக்க நடவடிக்கை எப்போது?

/

வண்டலூரில் சாலை படுமோசம் சீரமைக்க நடவடிக்கை எப்போது?

வண்டலூரில் சாலை படுமோசம் சீரமைக்க நடவடிக்கை எப்போது?

வண்டலூரில் சாலை படுமோசம் சீரமைக்க நடவடிக்கை எப்போது?


ADDED : ஜூலை 09, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதியில், ஏழு மற்றும் இரண்டாவது பிரதான சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

இந்த இரு சாலைகளும், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:

ஏழு மற்றும் இரண்டாவது பிரதான சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை.

இதை தொடர்ந்து, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், தற்போது வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் ஆறாக ஓடுகிறது. ஏற்கனவே, சாலையும் சேதமான நிலையில், கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், அப்பகுதி வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சாலையை சீரமைத்து, கழிவுநீர் வடிகால்வாய் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us