sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சதுரங்கப்பட்டினத்தில் கடலரிப்பு நேர்கல் தடுப்பு ஏற்படுத்தப்படுமா?

/

சதுரங்கப்பட்டினத்தில் கடலரிப்பு நேர்கல் தடுப்பு ஏற்படுத்தப்படுமா?

சதுரங்கப்பட்டினத்தில் கடலரிப்பு நேர்கல் தடுப்பு ஏற்படுத்தப்படுமா?

சதுரங்கப்பட்டினத்தில் கடலரிப்பு நேர்கல் தடுப்பு ஏற்படுத்தப்படுமா?


ADDED : ஜூன் 21, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினத்தில் கடலரிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாக்க இடமின்றி, அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், சதுரங்கப்பட்டினம் வடக்கு, தெற்கு, மெய்யூர் ஆகிய மீனவ பகுதிகள் உள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், மீனவ குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி கடற்கரை யில், 20 ஆண்டுகளுக்கு முன் கடலரிப்பு ஏற்படாமல், மணற்பரப்புடன் கடற்கரை விரிந்து இருந்தது. சுனாமி அலை தாக்குதலுக்கு பின், ஒவ்வொரு ஆண்டும் கடலரிப்பு ஏற்பட துவங்கியது.

நாளடைவில், படிப்படியாக கடலரிப்பு அதிகரித்து வருகிறது. கடலரிப்பு ஏற்பட்ட பிற பகுதிகளில், மீன்வளத்துறை சார்பில் நேர்கல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மூன்று மீனவ பகுதிகள் ஒருங்கிணைந்த இங்கு மட்டும், நேர்கல் தடுப்பு அமைக்கப்படவில்லை. ஆனால், இதற்கு அருகில் உள்ள புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ பகுதிகளில், நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அதனால், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகரித்து, முன்பை விட கடலரிப்பு அதிகரித்து வருவதாக, இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

கடல் அரிப்பால், கடற்கரை மணற்பரப்பு அழிந்து, நிலப்பகுதியில் கடல்நீர் புகுகிறது. அதனால், மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாக்க இடமின்றி, இப்பகுதிமீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இப்பகுதி யில் கடலரிப்பை தடுக்க, நேர்கல் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும்,அதுவரை தற்காலிக நடவடிக்கையாக மீனவர்கள்தங்களின் படகுகளை நிறுத்துவதற்கு இட வசதி செய்து தர வேண்டும் எனவும், மீனவர்கள்வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us