ADDED : ஜூன் 30, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர் அமலா, 38. இவரது கணவர் அய்யனார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் கிஷோர்குமார் என்பவரை, அமலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அமலா கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, வீட்டை விட்டு அவரை வெளியேற்றி விட்டார்.
நேற்று முன்தினம் இரவு அமலாவின் வீட்டிற்கு வந்த கிஷோர், உறவினர்களான ஜானகி, யோகேஸ்வரி முன்னிலையில் மனைவியை கத்தியால் குத்தி தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த அமலாவை, உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.