sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லாரி மோதி இளைஞர் பலி

/

லாரி மோதி இளைஞர் பலி

லாரி மோதி இளைஞர் பலி

லாரி மோதி இளைஞர் பலி


ADDED : ஆக 15, 2024 08:36 PM

Google News

ADDED : ஆக 15, 2024 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், 31. நேற்று முன்தினம் இரவு, வில்லியம்பாக்கம் கிராமத்தில் உள்ள உணவகத்திற்கு, பாலுார் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விமல்குமார் என்பவருடன், 'பஜாஜ் அப்பாச்சி' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இரவு 10:30 மணிக்கு, மீண்டும் பாலுார் நோக்கி, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், தேவனுார் கால்நடை மருத்துவமனை அருகில் வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலுார் போலீசார், இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, வெற்றிவேல் நேற்று உயிரிழந்தார்.

விமல்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us