/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
/
பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
ADDED : செப் 02, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிரா, 42; தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியை.
நேற்று முன்தினம் இரவு, வீட்டு பீரோவில் வைத்திருந்த நகையை சரிபார்த்துள்ளார். அப்போது, 20 சவரன் நகை மாயமானது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.