/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 349 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 349 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 25, 2025 03:31 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 349 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன், பரிமளாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்ல வீடு, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 349 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.

