ADDED : நவ 10, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்மங்கலம்: நன்மங்கலம், பெருமாள் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன், 50. 'போட்டோ ஸ்டுடியோ' நடத்தி வரும் இவர், கடந்த பத்தாண்டுகளாக, குடும்பத்தோடு இங்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, தன் மனைவி அணிந்திருந்த, 3.5 சவரன் தங்கச் சங்கிலியை, அடகு வைப்பதற்காக கழற்றி, பூஜை அறையில் வைத்துள்ளார்.
மாலை 6:30 மணிக்கு பார்த்தபோது, வைத்திருந்த தங்கச் சங்கிலி மாயாமாகி இருந்தது. புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

