sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

/

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்


ADDED : அக் 15, 2025 10:14 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, அரசு பேருந்து கவிழ்ந்து, 40க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு, நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. 40க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்தனர். கல்பாக்கம் அடுத்த, மேல்பெருமாள்சேரி பகுதியில், இரவு 7:00 மணிக்கு கடந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க, பேருந்தின் ஓட்டுநர் வேகத்தை குறைத்து, சாலையின் இடதுபுறம் ஒதுங்கியுள்ளார்.

அப்போது சாலையோர மண் சரிவு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 40க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர். அப்பகுதியினர் மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us