/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச சதுரங்கம் 500 பேர் பங்கேற்பு
/
சர்வதேச சதுரங்கம் 500 பேர் பங்கேற்பு
ADDED : ஆக 19, 2025 12:17 AM

திருப்போரூர், மாம்பாக்கத்தில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், 500 பேர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளி, ஆர்.வி.சதுரங்க அகாடமி சார்பில், சர்வதேச செஸ் போட்டி, கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
போட்டியில் அமெரிக்கா, எகிப்து, ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள் உட்பட 500 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற 170 மாணவ - மாணவியருக்கு, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை மியான்மர் ஒன்றிய குடியரசின் கவுரவ துாதர் ரங்கநாதன், விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளியின் கல்வி ஆலோசகர் மாலதி ஆகியோர் வழங்கினர்.