/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் தேர்தல் பணிக்கு ரூ.5.98 கோடி
/
ஸ்ரீபெரும்புதுார் தேர்தல் பணிக்கு ரூ.5.98 கோடி
ADDED : ஜன 22, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,
கடந்த ஏப்., மாதம் நடந்த, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தேர்தலில், 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியம் வழங்க கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அருண்ராஜ், தேர்தல் கமிஷனுக்கு, கடந்த ஆண்டு கருத்துரு அனுப்பி வைத்தார்.
அதன்பின், லோக்சபா தேர்தலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 5 கோடியே 98 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தேர்தல் கமிஷன், கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, ஆறு சட்டசபை தொகுதிகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.