/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மகாவீரர் கோவிலில் 6 சவரன், பணம் கொள்ளை
/
செங்கை மகாவீரர் கோவிலில் 6 சவரன், பணம் கொள்ளை
ADDED : பிப் 25, 2024 01:31 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பெரியமணிக்கார தெருவில், 20 ஆண்டுகள் பழமையான மகாவீரர் கோவில் உள்ளது.
இங்கு, செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத்தவர் வந்து வழிபட்டு செல்வர்.
இக்கோவில் தினமும் இரவு 8:30 மணி வரை திறந்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகத்தினர் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை நிர்வாகிகள் கோவிலை திறந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 6 வெள்ளி கிரீடங்கள், 6 சவரன் தங்க பட்டைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.