sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மீன்வலை கூடம் கவலைக்கிடம் புதிதாக அமைக்க வேண்டுகோள்

/

மீன்வலை கூடம் கவலைக்கிடம் புதிதாக அமைக்க வேண்டுகோள்

மீன்வலை கூடம் கவலைக்கிடம் புதிதாக அமைக்க வேண்டுகோள்

மீன்வலை கூடம் கவலைக்கிடம் புதிதாக அமைக்க வேண்டுகோள்


ADDED : அக் 09, 2024 12:28 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் அடுத்த பெருந்துறவு பகுதியில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாட்டுப்படகு வாயிலாக கடலுக்கு சென்று மீன் பிடிப்பதே, இப்பகுதி வாசிகளின் பிரதான தொழில்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இங்கு வலைப்பின்னும் கூடம் மற்றும் வலை பாதுகாப்பு மையம் கட்டப்பட்டது. இதில், மீனவர்கள் தங்கள் வலைகளை பாதுகாப்பாக வைத்து வந்தனர்.

நாளடைவில் பராமரிப்பின்றி வலை பாதுகாப்பு மையத்தின் மேல்தளம் பழுதடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்ததால், மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள வலைகள் சேதமடைவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், பலத்த காற்று வீசினால், வலைப்பின்னும் கூடத்தின் ஓடுகள் உடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வலை பாதுகாப்பு மையத்துடன் கூடிய புதிய மீன்வலை பின்னும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us