sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பயன்பாடற்ற நியாய விலை கடை கட்டடத்தால் விபத்து அபாயம்

/

பயன்பாடற்ற நியாய விலை கடை கட்டடத்தால் விபத்து அபாயம்

பயன்பாடற்ற நியாய விலை கடை கட்டடத்தால் விபத்து அபாயம்

பயன்பாடற்ற நியாய விலை கடை கட்டடத்தால் விபத்து அபாயம்


ADDED : பிப் 12, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:நியாய விலைக் கட்டடம் சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ளதால், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சிறுபாக்கம் அருகே ஒரத்தி ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், வடமணிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக, நியாய விலை கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், இந்த கடையை பயன்படுத்தி வந்தனர்.

கட்டடம் பழமையானதால் விரிசல்கள் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

அதனால், பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், புதிதாக நியாய விலை கடைக்கு கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது, பயன்பாடின்றி உள்ள பழைய கட்டடத்தின் பின்புற சுவர் இடிந்துள்ளது.

இதனால், இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இங்கு நடக்கின்றன.

பள்ளிக்கூடம் அருகே இந்த பழைய கட்டடம் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us