/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரங்கிமலை தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்
/
பரங்கிமலை தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்
ADDED : மார் 05, 2024 04:02 AM
சென்னை, : பரங்கிமலை - கோயம்பேடு - சென்ட்ரல் மெட்ரோ ரயில் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையம் - விம்கோ நகர் மெட்ரோ தடத்தில், அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
மற்ற நேரங்களில் அதிகபட்சமாக, 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், பரங்கிமலை - சென்ட்ரல் தடத்தில் அலுவலக நேரங்களில், 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
மற்ற நேரங்களில், 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதனால், பயணியர் மெட்ரோ ரயில் சேவைக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

