sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காட்டாங்கொளத்துாரில் விவசாய பணி தீவிரம்

/

காட்டாங்கொளத்துாரில் விவசாய பணி தீவிரம்

காட்டாங்கொளத்துாரில் விவசாய பணி தீவிரம்

காட்டாங்கொளத்துாரில் விவசாய பணி தீவிரம்


ADDED : ஜன 20, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் வில்லியம்பாக்கம், குருவன்மேடு, பாலுார், ஆத்துார், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழில்.நெல், வாழை, நிலக்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன.

கடந்த மாதம் பெய்த மழையில் சுற்று பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியதால் தற்பொழுது ஏர்உழுதல், வரப்பு அமைத்தல் நாற்றங்கால் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைத்தல் முறையை பின்பற்றி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:

கடந்த காலங்களில் இந்த பகுதியில் மூன்று போகம் பயிரிடப்பட்டது. தற்பொழுது நகரமயமாதல் காரணமாக ஒரு போகமாக குறைந்து உள்ளது. சுற்றி உள்ள கொளத்துார், அனுமந்தபுரம், ஆத்துார், வெண்பாக்கம் கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றுகின்றனர். எங்கள் கிராமத்தில் பெரும்பாலும் நாற்று விட்டு நடவு செய்யும் பழைய முறையே பின்பற்றுகிறோம். செலவு கூடுதலாக இருந்தாலும் நாற்று நல்ல வளமாக வளரும் என இந்த முறையை பின்பற்றுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us