sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலை நகர் நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

மறைமலை நகர் நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மறைமலை நகர் நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மறைமலை நகர் நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : செப் 29, 2025 11:56 PM

Google News

ADDED : செப் 29, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் நகர மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,வில் 14 பேர், அ.தி.மு.க.,வில் 5, ஐ.ஜே.கே., 1, சுயேச்சை ஒருவர் என, 21 கவுன்சிலர்கள் உள்ளனர்.

மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை, தி.மு.க., நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமையில், நகராட்சி கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் நகர மன்ற கூட்டம் நடந்தது.

இதில், 21 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வரவு - செலவு குடிநீர், மின் விளக்கு, மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள் என, 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், 8வது வார்டு காந்தி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல்வரால் திறக்கப்பட்ட சமுதாயக்கூடம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

கொளத்துார் குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதால் பேரமனுார், சட்டமங்கலம், திருக்கச்சூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அது நிராகரிக்கப்பட்டதால் அ.தி.மு.க.,வினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us