sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 10, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தி.மு.க., அரசை கண்டித்தும், திருப்போரூரில் நேற்று, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை வகித்தார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருப்போரூர் பேரூராட்சி காலவாக்கம் கிராமத்தில் சர்வே எண் 38/1, 236/ 1ல், 50 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

திருப்போரூர்- - நெம்மேலி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். திருப்போரூரில் மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலர் குமரவேல் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்போரூர் நகர செயலர் சிவராமன் நன்றி கூறினார்.

இ.கம்யூ., போராட்டம்


திருப்போரூர் ரவுண்டானா அருகே நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 250 பேர் குவிந்தனர்.

விலைவாசி உயர்வு, 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஓ.எம்.ஆர்., சாலை, ரவுண்டானாவிலிருந்து, இந்தியன் வங்கி வரை பேரணி சென்றனர்.

வங்கி எதிரே மறியல் செய்ய முயன்ற 200 பேரை, திருப்போரூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலை விடுவித்தனர்.

திருப்போரூரில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இரு கட்சிகள் மறியல், பேரணியால், சலசலப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us