sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்

/

மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்

மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்

மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்


ADDED : ஆக 18, 2025 02:24 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கத்தில், மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, செங்கல் கட்டுமானத்தால் கொட்டகை அமைத்துள்ளனர்.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இங்குள்ள காந்தி நகர் 2வது பிரதான சாலையில், நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் அமைந்துள்ளன.

இத்தெருவில் வசித்துவரும் தனிநபர், தன் இடத்தை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயை முழுதுமாக ஆக்கிரமித்து, செங்கல் சுவர் எழுப்பி, 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரையிலான கொட்டகை அமைத்து, அதில் மாடுகளை பராமரித்து வருகிறார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் அமைத்தால், மழைக்காலங்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, மழைநீரால் பகுதி மக்கள் பாதிக்கும் சூழல் உள்ளது.எனவே, இந்த ஆக்கிரமிப்பை துவக்கத்திலேயே அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், இவரை பின்பற்றி பலரும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us