sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையை பெயர்த்து ஜல்லி, மணல் சுரண்டல் ஆப்பூரில் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

/

சாலையை பெயர்த்து ஜல்லி, மணல் சுரண்டல் ஆப்பூரில் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

சாலையை பெயர்த்து ஜல்லி, மணல் சுரண்டல் ஆப்பூரில் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

சாலையை பெயர்த்து ஜல்லி, மணல் சுரண்டல் ஆப்பூரில் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு


ADDED : அக் 03, 2024 01:01 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், கடந்த 2009- - 10ம் ஆண்டு, அரசு நிலத்தில் ஆட்டோ நகர் உருவாக்கப்பட்டு, சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த மனைகளுக்கு சென்று வர, தார் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், மனைகளில் குடியேற யாரும் வராததால், சாலை பயன்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சில மாதங்களாக, இந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தார் சாலைகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக பெயர்த்து எடுத்து, ஜல்லி மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று அதிகாலை, இந்த பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதைக் கண்ட கிராம மக்கள், பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை மடக்கி பிடிக்க முயன்றனர்.

லாரி தப்பிச் சென்ற நிலையில், பொக்லைன் இயந்திரத்தை மக்கள் சிறைபிடித்து, காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார் மற்றும் ஆப்பூர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம், பொக்லைன் இயந்திரத்தை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us