ADDED : ஜன 09, 2024 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 45. பிளம்பர். நேற்று முன்தினம் மாலை 6:50 மணிக்கு, சென்னையிலிருந்து சூலேரிக்காட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
புதிய கல்பாக்கம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்ற கார் மீது மோதி காயமடைந்தார்.
அப்பகுதியினர், காயமடைந்த அய்யப்பனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
அய்யப்பனின் சகோதரர் சீதாராமன், மாமல்லபுரம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

