sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 06, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:கோவை கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வை கண்டித்து, மதுராந்தகம் தேரடி வீதியில் நேற்று, பா.ஜ.,வினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். மகளிர் அணி மாநில துணைத்தலைவி சங்கீதா தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 'தி.மு.க., ஆட்சியில் மதுபோதை, கஞ்சா ஆகியவை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டோர் சுதந்திரமாக உள்ளனர்.

'அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளியை பிடிக்க காலம் தாழ்த்திய அரசு, கோவை கல்லுாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை சுட்டு பிடித்ததாக பெருமையுடன் சொல்வது வெட்கக்கேடான விஷயம். முதல்வர் பதவி விலக வேண்டும்' என, கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக பா.ஜ.,வினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us