/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளக்கரை சுற்றுச்சுவர் உடைப்பு சமூக விரோதிகள் அட்டூழியம்
/
குளக்கரை சுற்றுச்சுவர் உடைப்பு சமூக விரோதிகள் அட்டூழியம்
குளக்கரை சுற்றுச்சுவர் உடைப்பு சமூக விரோதிகள் அட்டூழியம்
குளக்கரை சுற்றுச்சுவர் உடைப்பு சமூக விரோதிகள் அட்டூழியம்
ADDED : டிச 09, 2024 01:12 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், கெங்கையம்மன் கோவில் அருகே, நல்லான்செட்டி குளம் உள்ளது. வறட்சிக் காலத்திலும் தண்ணீர் வற்றாத இக்குளம், சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், படித்துறைகள் மற்றும் கரைகள் அமைத்து, குளம் சீரமைக்கப்பட்டது. அதன் பின் முறையான பராமரிப்பில்லாமல், குளத்தினுள் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து, குப்பையும் கொட்டப்பட்டது. குளத்தின் கரைப் பகுதிகளும் புதர் மண்டியது.
சில மாதங்களுக்கு முன் இந்த குளத்தை, கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்து, சீரமைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கனரக இயந்திரம் வாயிலாக குளம் துார் வாரப்பட்டது. மின் விளக்கு அமைத்தல், குளக்கரை படித்துரை, நடைபாதை, குளத்தைச் சுற்றி இரும்பு கம்பியுடன் சுற்றுச்சுவர் என, குளம் முழுதும் மேம்படுத்தப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஆனால், சமூக விரோதிகள் சுற்றுச்சுவர் இரும்பு கம்பியை திருடுவதற்காக, கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு கம்பியுடன் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை, இரவு நேரத்தில் உடைத்து சாய்த்துள்ளனர்.
இது, பகுதிவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்காக 20 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை மேம்படுத்திவரும் நிலையில், முழுமையாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சமூக விரோதிகள் இவ்வாறு செய்தது, கண்டிக்கத்தக்கது.
எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.