sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் அவசியம்

/

மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் அவசியம்

மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் அவசியம்

மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் அவசியம்


ADDED : ஜூலை 14, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே புதிதாக, நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது.

இந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக, மதுராந்தகம்- - சித்தாமூர் மாநில நெடுஞ்சாலையில், முதுகரை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை இல்லை.

இதனால், குருகுலம் மற்றும் முதுகரை பகுதி நிறுத்தங்களில் இறங்கி, நகராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டி உள்ளது.

இதன் காரணமாக நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு பணி காரணமாக வரும் பொதுமக்கள், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர்.

எனவே, நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் நிழற்குடை அமைத்து, அனைத்து நகர பேருந்துகளும் அங்கு நின்று செல்ல, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us