ADDED : அக் 21, 2025 11:30 PM
செங்கல்பட்டு: நவீன சலவையகம் அமைக்க, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தெரிவித்தார்.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள். சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்களின், பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க, தமிழக அரசு நிதி உதவியுடன், புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .
நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில், 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.