sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சதுரங்கப்பட்டினம் வாகன நிறுத்துமிட ஏலம் அரசியல் தலையீடால் மீண்டும் ஒத்திவைப்பு

/

சதுரங்கப்பட்டினம் வாகன நிறுத்துமிட ஏலம் அரசியல் தலையீடால் மீண்டும் ஒத்திவைப்பு

சதுரங்கப்பட்டினம் வாகன நிறுத்துமிட ஏலம் அரசியல் தலையீடால் மீண்டும் ஒத்திவைப்பு

சதுரங்கப்பட்டினம் வாகன நிறுத்துமிட ஏலம் அரசியல் தலையீடால் மீண்டும் ஒத்திவைப்பு


ADDED : செப் 28, 2024 04:20 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்: கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் நுழைவாயில் அருகில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.

கல்பாக்கம் ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை, ஊராட்சி இடத்தில் நிறுத்தி, அணுசக்தி வளாக பணிக்கு செல்கின்றனர். கார், கனரக வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுகின்றன.

ஊராட்சி நிர்வாகவருவாய் கருதி, ஊராட்சி நிர்வாகம், கடந்த 2022ல் அங்கு கட்டண வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த முடிவெடுத்து, ஊரக வளர்ச்சித் துறை அனுமதி பெற்றது.

தேர்தல் பகை


முதலில் ஊராட்சி நிர்வாகமே, கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது. பின், பொது ஏலத்தில், ஆண்டு குத்தகைக்கு அளிக்க முடிவெடுத்து, அதற்குஏற்பாடு செய்தது.

ஊராட்சித் தலைர் ரேவதியின் கணவரான அ.தி.மு.க., பிரமுகர் சாமிநாதனுடன், இப்பகுதிதி.மு.க., பிரமுகரான ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கு, உள்ளாட்சித்தேர்தல் பகை இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க., பிரமுகர் பொது ஏலம் நடத்தவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்ததாக கூறப்படுகிறது.

முட்டுக்கட்டை


தி.மு.க., பிரமுகர் தலையீடு காரணமாக, வட்டார வளர்ச்சி நிர்வாக அதிகாரிகள், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. அதனால், ஓராண்டாக பொது ஏலம் நடத்தப்படாமல் முடங்கியிருந்தது.

இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஊராட்சித் தலைவர் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்று, நேற்று பொது ஏலம் நடத்த அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க., பிரமுகரின் முட்டுக்கட்டையால், நிர்வாக காரணங்களுக்காக மறு ஏல தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்து, நேற்று ஏலம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us