/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கடற்கரை கோவிலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
/
மாமல்லை கடற்கரை கோவிலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 20, 2024 10:07 PM
மாமல்லபுரம்:கல்பாக்கத்தில், அணுசக்தி தொழில் வளாகம் அமைந்துள்ள நிலையில், இப்பகுதி கடலோர பாதுகாப்பு இன்றியமையாதது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி நேவல் கமாண்டிங் பிளேக் ஆபீசர் சார்பில், 'சீ விஜில்' கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை, துவக்கப்பட்டது.
தேசிய, மாநில பாதுகாப்பு படையினர், தமிழக போலீசார், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை, தீவிரமாக கண்காணித்தனர்.
புதுச்சேரி சாலையில் சென்ற வாகனங்களில் சோதனை நடத்தினர். நேற்று காலை 8:30 மணிக்கு, மாமல்லபுரம் புறவழி சாலை சந்திப்பில், புதுச்சேரி பேருந்திலிருந்து இறங்கிய நான்கு பேர், மாமல்லபுரம் நகர்ப் பகுதிக்கு நடந்து சென்றனர். கங்கைகொண்டான் மண்டப சந்திப்பு அருகில் சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக இருந்த அவர்களை, போலீசார் மடக்கி விசாரித்தனர்.
அப்போது, இங்குள்ள கடற்கரை கோவிலை தகர்க்க திட்டமிடுவதாக, சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட சுங்கத்துறை ஆய்வாளர், கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பேர் ஆகியோர் என்பது தெரிந்தது.

