/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கன்டெய்னர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
/
கன்டெய்னர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜன 25, 2025 12:24 AM
பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம், செட்டிபேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பிரசாத், 19; இன்ஜினியரிங் மாணவர். நேற்று, 'யமஹா ஆர்15' பைக்கில், தன் நண்பர் கிருஷ்ணசாமி, 20, என்பவரை அழைத்துக்கொண்டு, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி நோக்கிச் சென்றார்.
செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியை கடந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது.
இதில், லாரியின் அடியில் சிக்கிய மோகன் பிரசாத், சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கோபி, 29, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

