/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி இரு துறைகளால் குழப்பம்
/
மாமல்லையில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி இரு துறைகளால் குழப்பம்
மாமல்லையில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி இரு துறைகளால் குழப்பம்
மாமல்லையில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி இரு துறைகளால் குழப்பம்
ADDED : பிப் 13, 2024 04:07 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை பாதுகாக்கும் தொல்லியல் துறை, சிற்பங்களை பராமரித்து வருவதுடன், குழு சின்னங்களாக வகைப் படுத்தியுள்ளது.
அவற்றை காணும் இந்திய பயணியரிடம், தலா 40 ரூபாய்; சர்வதேச பயணியரிடம், தலா 600 ரூபாய் என, நுழைவுக்கட்டணம் வசூலித்து வருகிறது.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு ஆகிய சிற்ப பகுதிகளில், ஏதேனும் ஒரு இடத்தில் பெறும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்ப பகுதிளையும் பார்வையிடலாம்.
இது ஒருபுறமிருக்க, மகிஷாசுரமர்த்தினி குடைவரை பகுதியில், கலங்கரை விளக்கம் மற்றும் கடல்சார் அருங்காட்சியகம் உள்ளது. கப்பல் போக்குவரத்துத் துறையின் கலங்கரை விளக்க நுழைவுக் கட்டணம், அருங்காட்சியக நுழைவுக் கட்டணம் என, தனியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
தொல்லியல் துறையிடம் நுழைவுச்சீட்டு பெற்ற பயணியர், கலங்கரை விளக்கம், அருங்காட்சியம் ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்படவிலை.
கப்பல் போக்குவரத்து துறையினரிடம் தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். பயணியரும் ஒரே இடத்தில், தனித்தனி கட்டணமா என, அதிர்ச்சியடைந்து தகராறு செய்கின்றனர்.
தற்போது, பயணியர் அதிக அளவில் குவியும் சூழலில், குழப்பத்தை தவிர்க்க, மத்திய அரசுகளின் கீழ் இயங்கும் இரண்டு துறைகளும், வருவாய் பங்கீடு அடிப்படையில், ஒரே கட்டணம் வசூலிக்கும் வகையில் தீர்வு காண வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.