sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தொடரும் பனி மூட்டம் விமான சேவை தாமதம்

/

தொடரும் பனி மூட்டம் விமான சேவை தாமதம்

தொடரும் பனி மூட்டம் விமான சேவை தாமதம்

தொடரும் பனி மூட்டம் விமான சேவை தாமதம்


ADDED : பிப் 10, 2025 11:48 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில் சில நாட்களாக, பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், காலை வேளைகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நேற்றும் சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, காலை 6:30 மணிக்கு வரவேண்டிய விமானம், தாமதமாக காலை 9:00 மணிக்கு வந்தது.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு காலை 7:25 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 8:05 மணிக்கு, கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் விமானம், நேற்று காலை 8:30 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து காலை 8:45 மணிக்கு வரவேண்டிய விமானமும் தாமதமாக வந்தது. சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக, மற்ற விமான நிலையங்களில் சென்று விமானங்கள் தரை இறங்குவதை தவிர்க்க, இது போன்று நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணியருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக, தாமதம் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து விஜயவாடா, அந்தமான், சூரத், டில்லி, கோவை, துபாய் உள்ளிட்ட ஏழு விமானங்கள், அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.






      Dinamalar
      Follow us