sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் பயிர் காப்பீடு 30ம் தேதி வரை அவகாசம்

/

செங்கையில் பயிர் காப்பீடு 30ம் தேதி வரை அவகாசம்

செங்கையில் பயிர் காப்பீடு 30ம் தேதி வரை அவகாசம்

செங்கையில் பயிர் காப்பீடு 30ம் தேதி வரை அவகாசம்


ADDED : நவ 20, 2024 10:08 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பயிர் காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி வரை, விவசாயிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்து.

இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டியன் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதனை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே காப்பீடு செய்ய வேண்டும்.

நெல் சம்பா பயிருக்கு, காப்பீட்டு தொகையில் விவசாயிகள், 15 சதவீதம் மட்டும் காப்பீடு கட்டணமாக, ஏக்கருக்கு 517.50 ரூபாய் செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட, கடன் பெற்ற விவசாயிகள் பயிரியை காப்பீடு செய்துகொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மற்றும் www.pmfby.gov.in தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தை அனுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us