sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு வெட்டு

/

கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு வெட்டு

கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு வெட்டு

கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு வெட்டு


ADDED : அக் 25, 2024 07:57 PM

Google News

ADDED : அக் 25, 2024 07:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ஊராட்சி, ஏரிக்கரை தெரு, சிங்கார தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன், 52. பெயிண்டர்.

வண்டலுார் கணபதி நகர் பகுதியில் வசித்து வரும் அவரது நண்பரான ராஜேந்திரன், 65, என்பவர், வண்டலுார் அணுகு சாலையில், மீன் கடை நடத்தி வருகிறார்.

வியாபார தேவைக்காக, சில மாதங்களுக்கு முன், சீனிவாசனிடம் 5,000 ரூபாய் ராஜேந்திரன் கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில், மீன் கடைக்கு சென்ற சீனிவாசன், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கடையில் மீன் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து, சீனிவாசனின் இடது பக்க தாடையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புகாரின்படி, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து, மீன் வியாபாரி ராஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us