sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அபாய நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

/

அபாய நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

அபாய நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

அபாய நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை


ADDED : ஜன 20, 2025 01:44 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:சிறுபேர்பாண்டி ஊராட்சியில், இடிந்து விழும் நிலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுபேர்பாண்டி ஊராட்சியில், அச்சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட பாபுராயன் பேட்டை, அல்லானுார், சிறுபேர்பாண்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால், சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக, அலுவலகத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

இதனால், மழைக்காலங்களில் கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகள், ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.

எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us