sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

/

 கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

 கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

 கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : டிச 31, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டின் இறுதி செவ்வாய் தரிசனத்தில், ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், வழக்கமாக அன்றைய நாட்களில் கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூருக்கு வருவர். அந்த வகையில், நேற்று 2024ம் ஆண்டின் கடைசி செவ்வாய் என்பதால், காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

வட்ட மண்டபத்தை 11, 108 முறைப்படி சுற்றியும், வட்ட மண்டபம் அருகே விளக்கேற்றியும், கூட்டு வழிபாடு செய்தனர். இதனால், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us